செய்திகள்
விபத்து பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேன் மோதி வியாபாரி பலி

Published On 2020-11-22 04:21 GMT   |   Update On 2020-11-22 04:21 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேன் மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயில்பட்டி:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 27), பூ வியாபாரி. இவர் துலுக்கன்குறிச்சி அருகே பூ வியாபாரம் முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் மல்லிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது மீனாட்சிபுரம் விலக்கு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த வேனும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் செந்தில்குமார் படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செந்தில்குமாரின் உறவினர் முத்துராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப் பதிவு செய்து வேன் டிரைவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த மாரிமுத்துவை (45) கைது செய்தார்.
Tags:    

Similar News