செய்திகள்
பாலத்திலிருந்து ஆற்றில் வேன் கவிழ்ந்து விபத்து- 7 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிராவில் பாலத்தில் சென்றுகொண்டிருந்த வேன், ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
துலே:
மகாராஷ்டிர மாநிலம் துலே தாலுகா விஞ்சூர் அருகே, பாலத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு வேன், திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது.
இன்று அதிகாலையில் நடந்த இந்த விபத்தில், வேனில் இருந்த பயணிகளில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.