ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தரிசன நேரம் இரவு 8 மணிவரை நீட்டிப்பு
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தினமும் மாலை 6 மணிவரை இருந்த தரிசன நேரம் இரவு 8 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருச்சனூர் :
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தினமும் காலை 7.30 மணியில் இருந்து மாலை 6 மணிவரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால், தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் எனப் பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி தரிசன நேரத்தை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இதையடுத்து நேற்று முதல் தினமும் 20 ஆயிரம் பக்தர்களை சாமி தரிசனத்துக்கு அனுமதிக்க தேவஸ்தானம் அனுமதி அளித்தது. மாலை 6 மணிவரை இருந்த தரிசன நேரம் இரவு 8 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கிடையே, கோவிலில் தனுர் மாத பூஜைகள் தினமும் காலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை நடக்கிறது என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தினமும் காலை 7.30 மணியில் இருந்து மாலை 6 மணிவரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால், தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் எனப் பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி தரிசன நேரத்தை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இதையடுத்து நேற்று முதல் தினமும் 20 ஆயிரம் பக்தர்களை சாமி தரிசனத்துக்கு அனுமதிக்க தேவஸ்தானம் அனுமதி அளித்தது. மாலை 6 மணிவரை இருந்த தரிசன நேரம் இரவு 8 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கிடையே, கோவிலில் தனுர் மாத பூஜைகள் தினமும் காலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை நடக்கிறது என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.