செய்திகள்
கோப்பு படம்

அய்யம்பேட்டை அருகே ரெயிலில் அடிப்பட்டு அடையாளம் தெரியாத ஆண் பலி

Published On 2021-11-21 14:53 GMT   |   Update On 2021-11-21 14:53 GMT
அய்யம்பேட்டை அருகே ரெயிலில் அடிப்பட்டு அடையாளம் தெரியாத ஆண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே அரியமங்கை ரெயில் தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் உடல் சிதறி கிடப்பதாக தஞ்சை ரெயில்வே இருப்புபாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, ஏட்டு சம்பத்குமார், தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் ஆகியோர் விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

ஆனால் இறந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் சென்னை-திருச்சி சோழன் விரைவு ரெயில் அவர் மீது மோதி இருக்கலாம் என தெரியவந்தது.

இருப்பினும் அவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News