செய்திகள்
கொலை

எட்டயபுரத்தில் புதுமாப்பிள்ளை படுகொலை

Published On 2021-10-20 10:17 GMT   |   Update On 2021-10-20 10:17 GMT
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இன்று காலை புதுமாப்பிள்ளை தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள குமாரகிரி புதூர் காளிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சூர்ய ராகவன் (வயது 31), டி.வி. மெக்கானிக்.

இவர் எட்டயபுரம் மெயின் பஜாரில் கடை நடத்தி வருகிறார். இன்று காலை கடைக்கு சென்று வேலை பார்த்து கொண்டிருந்தார்.

கடையில் ஒரு பெண் ஊழியரும் இருந்தார். 11 மணியளவில் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் பெண் ஊழியரிடம் தண்ணீர் கேட்டார். அவர் தண்ணீர் கொடுப்பதற்குள் அந்த நபர் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த சூர்ய ராகவனின் கண்ணில் மிளகாய் பொடியை தூவினார்.

இதனால் சூர்ய ராகவன் நிலைகுலைந்து போனார். அப்போது அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சூர்ய ராகவனின் கழுத்தில் வெட்டினார். கண் இமைக்கும் நேரத்தில் சூர்ய ராகவனின் தலையை துண்டித்து சிறிது தூரத்தில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஜாரில், பட்டப்பகலில் நடைபெற்ற இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், டி.எஸ்.பி. பிரகாஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று துண்டிக்கப்பட்ட சூர்ய ராகவனின் தலை மற்றும் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்தி, மிளகாய் பொடி கிடந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சூர்ய ராகவனுக்கு கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு தான் காதல் திருமணம் நடந்துள்ளது.

எனவே காதல் தகராறில் இந்த கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News