செய்திகள்
செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி:
செஞ்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் ராஜசேகரன். இவர் செஞ்சி பொதுப்பணித்துறை பாசன பிரிவு அலுவலகத்தில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று, தனது மோட்டார் சைக்கிளை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னர் திரும்பி வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம மனிதர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.