செய்திகள்
சுடு தண்ணீர் போட்ட போது தீ பற்றியதில் உடல் கருகிய மாணவி பலி
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று யமுனாதேவி மீது பற்றிய தீயை அணைத்தனர்.
குன்னத்தூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 44). இவரது மகள் யமுனாதேவி (15). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் சுடுதண்ணீர் போடுவதற்காக யமுனாதேவி விறகு அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது தீ சரியாக பிடிக்காததால் மண்எண்ணையை எடுத்து ஊற்றியுள்ளார்.
அப்போது அவரது உடையில் தீப்பற்றியதில் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று யமுனாதேவி மீது பற்றிய தீயை அணைத்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யமுனாதேவி இறந்தார். இதுகுறித்து குன்னத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.