ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி செலரியோ

புதிய காருக்கான முன்பதிவை துவங்கிய மாருதி சுசுகி

Published On 2021-11-02 11:09 GMT   |   Update On 2021-11-02 11:09 GMT
மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய செலரியோ மாடலினை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.


மாருதி சுசுகி நிறுவனம் புதிய செலரியோ மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. இந்தியாவில் புதிய செலரியோ மாடல் நவம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய மாடலுக்கான முன்பதிவை மாருதி சுசுகி துவங்கி இருக்கிறது. 

மாருதி சுசுகியின் புதிய செலரியோ மாடல் முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாருதி சுசுகி செலரியோ மாடலில் கே சீரிஸ் டூயல் ஜெட், டூயல் விவிடி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஏ.எம்.டி. யூனிட் வழங்கப்படுகிறது. 



இந்த மாடலில் புதிய கிரில், ஹாலோஜன் ஹெட்லேம்ப், பிளாக் அலாய் வீல்கள், புதிய பம்ப்பர், டெயில் லைட்கள் உள்ளன. காரின் உள்புறம் பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், புதிய ஏ.எம்.டி. லீவர் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News