உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றமா? சுகாதாரத்துறை இயக்குனர் பதில்

Published On 2022-01-15 10:33 GMT   |   Update On 2022-01-15 10:33 GMT
புதுவை அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படுமா? என்பது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் பதில் அளித்தார்.
புதுச்சேரி:

புதுவையில் 2 ஆண்டுக்கு முன்பு கொரோனா பரவ தொடங்கியது. அப்போது கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக  மாற்றப்பட்டது. அங்கு கொரோனா நோயாளிகள் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

2-வது அலையின்போது அதிகளவில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளையும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டது. காசநோய்   மருத்துவ மனையிலும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. 

புதுவை அரசு ஆஸ் பத்திரியில் கொரோனா வார்டு மட்டும் அமைக்கப்பட்டு இருந்தது. அதோடு பிற சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையிலும் கொரோனாவுக்கு மட்டும் சிகிச்சை   அளிக்கப்பட்டது. படிப்படியாக தொற்று குறைய தொடங்கியதால் மருத்துவமனைகளில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

புதுவையில் கொரோனா 3-ம் அலை தொடங்கியுள்ள நிலையில் கதிர்காமம் அரசு  மருத்துவ கல்லூரி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படவில்லை. பாரதி பூங்கா அருகில் உள்ள அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள், அமைப்புகளிடையே எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.  கடந்த காலத்தைபோல கதிர்காமம் மருத்துவ மனையை கொரோனா மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
 
இதுதொடர்பாக சுகா தாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு கூறியதாவது:-

கோரிமேடு காசநோய் மருத்துவமனையில் 180 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இங்கு தற்போது 30 நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள படுக்கைகள் காலியாக உள்ளது. 
நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தால் பயன்படுத்த கடந்த காலத்தை போல அரசு ஆஸ்பத்திரியிலும் கொரோனா வார்டு உருவாக்கி உள்ளோம். இங்கு 160 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. அவசர சிகிச்சை பிரிவும் இயங்குகிறது. பிற நோய் களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறோம். 

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News