செய்திகள்
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5 ஆக பதிவு
நிலநடுக்கத்தினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5 ஆக பதிவாகியிருந்ததாக தேசிய பூகம்பவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் கட்டிடங்கள் குலுங்கின. பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.