செய்திகள்
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்

உத்தரகாண்டில் நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் விபத்து

Published On 2019-08-23 12:12 GMT   |   Update On 2019-08-23 12:12 GMT
உத்தரகாண்டில் நிவாரணப்பொருட்கள் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பயணித்த அனைவரும் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.
உத்தரகாசி:

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் ஹெலிகாப்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில், தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாசி மாவட்டத்தின் அரகோட் பகுதிக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் ஒன்று வந்து கொண்டிருந்தது. ஹெலிகாப்டர் டிக்கோச் என்ற பகுதியில் பறந்து கொண்டிருந்த போது பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் இருந்த ஒரு ஆற்றின் கரைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பைலட், துணை பைலட் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதற்கிடையில், கடந்த புதன்கிழமை இதே போன்று நிவாரண பொருட்கள் ஏற்றி வந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
Tags:    

Similar News