செய்திகள்
மீட்பு

ராயபுரத்தில் கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை மீட்பு

Published On 2020-09-17 02:52 GMT   |   Update On 2020-09-17 02:52 GMT
ராயபுரத்தில் கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தையை மீட்ட போலீசார் தந்தையிடம் ஒப்படைத்தனர். மேலும் குழந்தையை கடத்தியவரை தேடி வருகின்றனர்.
திருவொற்றியூர்:

மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர் பப்லு (வயது 45). இவர், தனது குடும்பத்துடன் ராயபுரம் ரெயில் நிலையம் வளாகத்தில் தங்கி கட்டுமான பணியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று சென்டிரல் ரெயில் நிலையம் சென்ற இவரிடம், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் (25) என்பவர் வேலை வாங்கி தரும்படி கேட்டார். உடனே பப்லு, அவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர் கடைக்கு சென்ற நேரத்தில் பப்லுவின் 3 வயது பெண் குழந்தை மரிஜூனவை சுனில் கடத்திச்சென்றுவிட்டார். இதுபற்றி ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்திய வாலிபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அங்கு சென்ற சுனில், தனக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகவும், எனது குழந்தையை வைத்துக்கொண்டு வேலை தேடி வருவதாகவும், தான் வேலை தேடிவிட்டு வரும்வரை குழந்தையை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு திரும்பி வரவில்லை. பின்னர்தான் அது பப்லுவின் குழந்தை என்பதும், அந்த குழந்தையை சுனில் கடத்தி வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் குழந்தையை மீட்டு பப்லுவிடம் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைவான சுனிலை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News