ஆன்மிகம்
ஏகாம்பரநாதர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவிழா

ஏகாம்பரநாதர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவிழா

Published On 2021-03-24 03:01 GMT   |   Update On 2021-03-24 03:01 GMT
ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி அம்பாளுடன் மேளதாளங்கள் அதிர்வேட்டுகள் முழங்க முன்னால் செல்ல 63 நாயன்மார்களும் பின்தொடர்ந்து ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.
காஞ்சீபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஓராண்டுக்கு பிறகு கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முக்கிய விழாவான 63 நாயன்மார்கள் திருவிழாவையொட்டி ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி அம்பாளுடன் மேளதாளங்கள் அதிர்வேட்டுகள் முழங்க முன்னால் செல்ல 63 நாயன்மார்களும் பின்தொடர்ந்து ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.

பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (புதன் கிழமை) காலை மரத்தேர் திருவிழாவும், 26-ந்தேதி இரவு வெள்ளி மாவடி சேவை, 27-ந் தேதி பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், முன்னாள் கோவில் மேலாளர் சீனிவாசன், கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News