செய்திகள்

சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் சிஎஸ்கே- ஐதராபாத் போட்டிக்கு கூடுதல் பாதுகாப்பு

Published On 2019-04-23 12:31 GMT   |   Update On 2019-04-23 12:31 GMT
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு எதிரொலியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 12-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் 41-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் - கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை- மார்ச் 21) இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தமிழகத்திற்கும் குறி வைத்ததாக ஒரு செய்தி வந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள முக்கியமான இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.



இன்றைய கிரிக்கெட் போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடுவார்கள். இதனைப் பயன்படுத்தி அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 துணை ஆய்வாளர்கள், 14 இணை ஆய்வாளர்களுடன் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News