ஆன்மிகம்
பெண்ணாடம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் தீமிதி விழா

பெண்ணாடம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் தீமிதி விழா

Published On 2021-03-06 03:48 GMT   |   Update On 2021-03-06 03:48 GMT
150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காளபரமேஸ்வரி கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு அங்காளம்மன் முன்னிலையில் 250-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பெண்ணாடம் எல்லையம்மன் கோவில் தெருவில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா வெகுகவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி தினந்தோறும் காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான தீமிதி விழா நேற்று மாலை கோவில் அருகே நடைபெற்றது. தீக்குண்டம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அங்காளம்மன் முன்னிலையில் 250-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதில் பெண்ணாடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News