செய்திகள்
கைது

10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

Published On 2020-11-22 07:08 GMT   |   Update On 2020-11-22 07:08 GMT
வீட்டில் தனியாக இருந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு:

ஈரோடு கொல்லம் பாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா காலம் என்பதால் பள்ளிகள் இயங்காததால் ஆன்லைனில் மாணவி பாடம் படித்து வந்தார்.

மாணவியின் தாய் இறந்து விட்டார். அவரது தந்தை லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். வேலை காரணமாக அவரது தந்தை வெளியே சென்று விடுவார். மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருந்து வந்தார்.

இதை அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (26) என்பவர் கவனித்து வந்தார். சம்பவத்தன்று மாணவிக்கு ஆறுமுகம் பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்து மாணவி வீடு திரும்பிய தனது தந்தையிடம் தெரிவித்தார். அவர் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபிசெட்டி பாளையத்தில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News