செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தில் கொரோனாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் அதிக உயிரிழப்பு

Published On 2021-05-18 15:25 GMT   |   Update On 2021-05-18 15:25 GMT
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 364 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றின் 2-வது அலை தாக்கலுக்கு இந்தியா உள்ளாகியுள்ளது. வட மாநிலங்களில் கடுமையான வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மகாராஷ்டிரா, டெல்லி, உ.பி., ம.பி. குஜராத் போன்ற மாநிலங்களில் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.

ஆனால் தற்போது தென்மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. 2-வது அலையில் சிக்கியவர்களுக்கு ஆக்சிஜன் அதிகமாக தேவைப்படுவதால், உயிரிழப்பு அதிகமாக உள்ளது. 

தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த மே 15-ந்தேதி இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 33,658 பேர் பாதிக்கப்பட்டனர். அன்று 303 பேர்தான் உயிரிழந்தனர். இன்று தினசரி கொரோனா பாதிப்பு 33,059 ஆக உள்ளது. என்றாலும் உயிரிழப்பு இதுவரை இல்லாத அளவிற்கு 364 ஆக பதிவாகியுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பும், உயிரிழப்பு விவரமும் பின்வருமாறு:-

தேதிபாதிப்புஉயிரிழப்பு
18-May33,059364
17-May33,075335
16-May33,181311
15-May33,658303
14-May31,892288
13-May30,621297
12-May30,355293
11-May29,272298
10-May28,978232
9-May28,897236
8-May27,397241
Tags:    

Similar News