செய்திகள்
கொலை வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபர் தற்கொலை
நெல்லையில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் சுப்பிரமணி (வயது21).
இவர் கடந்த 2019-ம் ஆண்டு அங்குள்ள மருதம் நகரை சேர்ந்த வாலிபர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இவருக்கு வலிப்பு நோய் உள்ளதால் அதற்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் சுப்பிரமணி (வயது21).
இவர் கடந்த 2019-ம் ஆண்டு அங்குள்ள மருதம் நகரை சேர்ந்த வாலிபர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இவருக்கு வலிப்பு நோய் உள்ளதால் அதற்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.