செய்திகள்
கொரோனா வைரஸ்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2021-04-30 12:58 GMT   |   Update On 2021-04-30 12:58 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலும்‌ 1390 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 817 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதிலும்‌ 1390 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 817 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News