செய்திகள்
விபத்து

திருத்துறைப்பூண்டி அருகே கார் மோதி மூதாட்டி பலி

Published On 2020-10-24 14:29 GMT   |   Update On 2020-10-24 14:29 GMT
திருத்துறைப்பூண்டி அருகே மெயில் ரோட்டில் சென்று கொண்டிருந்த மூதாட்டி மீது கார் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குறும்பல் மெயின் ரோடு மணலியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம்(வயது75). நேற்று இவர் திருவாரூர்- திருத்துறைப்பூண்டி மெயின் ரோட்டில் ஒரு கடையில் பால் வாங்கி கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக பஞ்சவர்ணம் மீது மோதியது. 

இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த திருத்துறைப்பூண்டியை சேர்ந்த மருதநாயகம்(22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News