செய்திகள்
கொரோனா தடுப்பூசி

திருக்கோவிலூரில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-06-06 15:38 GMT   |   Update On 2021-06-06 15:38 GMT
திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 482 பேர் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதை அடுத்து திருக்கோவிலூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் அரசு அங்கவை, சங்கவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதை வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மருத்துவம் இல்லா மேற்பார்வையாளர் பாலமுருகன், சுகாதார ஆய்வாளர்கள் சங்கரன், விக்னேஷ், பூபதி ஆகியோர் தலைமையிலான குழுவினர் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனர். இந்த முகாமில் திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 482 பேர் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
Tags:    

Similar News