செய்திகள்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சித்தராமையாவுக்கு காய்ச்சல் இல்லை: மருத்துவமனை நிர்வாகம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சித்தராமையாவுக்கு வைரஸ் அறிகுறி சற்று குறைந்து உள்ளது. அவர் நலமாக உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா (வயது 71), கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று சித்தராமையாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சித்தராமையாவின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கும்போது அவருக்கு காய்ச்சல் இருந்தது. தற்போது அவருக்கு காய்ச்சல் இல்லை. அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எங்கள் டாக்டர்கள் அவரை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு வைரஸ் அறிகுறி சற்று குறைந்து உள்ளது. அவர் நலமாக உள்ளார். சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைத்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சித்தராமையாவின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கும்போது அவருக்கு காய்ச்சல் இருந்தது. தற்போது அவருக்கு காய்ச்சல் இல்லை. அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எங்கள் டாக்டர்கள் அவரை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு வைரஸ் அறிகுறி சற்று குறைந்து உள்ளது. அவர் நலமாக உள்ளார். சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைத்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.