செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே டிரைவர் தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டையை அடுத்த உனிசெட்டி கிராமத்தை சேர்ந்த டிரைவர் மாதேஷ் (வயது 40), இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல் வயிற்று வலி ஏற்பட்டதால் மனம் உடைந்த மாதேஷ், விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாதேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.