செய்திகள்
கொரோனா பரிசோதனை

இலங்கையில் மேலும் 2,646 பேருக்கு கொரோனா

Published On 2021-06-07 19:23 GMT   |   Update On 2021-06-07 19:23 GMT
இலங்கையில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொழும்பு:

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 2,646 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,07,979 ஆக அதிகரித்துள்ளது.  

தொற்றில் இருந்து 1.76 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 30 ஆயிரத்து 145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் 1,789 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இலங்கையில் கொரோனா 3வது அலை பரவி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு அதிகரிப்பால் இலங்கையில் ஜூன் 14-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகளின் போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் இலங்கை 77-வது இடத்தில் உள்ளது.
Tags:    

Similar News