செய்திகள்
விபத்துக்குள்ளான விமானம் கருகி கிடக்கும் காட்சி

தரையிறங்கும்போது தீப்பிடித்த விமானம்- 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

Published On 2019-08-27 07:13 GMT   |   Update On 2019-08-27 07:13 GMT
உத்தர பிரதேச மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கும்போது விழுந்து தீப்பிடித்தது. அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.
அலிகார்:

டெல்லியில் இருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய விமானம் இன்று காலை உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள தானிபூர் விமான நிலையத்திற்கு வந்தது. அதில் 2 விமானிகள் உள்ளிட்ட 6 பேர் இருந்தனர்.

விமானம் தரையிறங்கும்போது, நிலைதடுமாறி ஓடுதளத்தை ஒட்டியுள்ள பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து அங்கு சென்ற மீட்புக்குழுவினர் உடனடியாக விமானத்தில் இருந்த 6 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

அவர்கள் மீட்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் விமானம்  தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் விமானத்தின் பெரும்பகுதி எரிந்துபோனது.



இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தரையிறங்கும்போது விமானத்தின் ஒரு சக்கரம், கம்பி வேலியில் மோதியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

விமானத்தை பழுதுபார்ப்பதற்காக, டெல்லியில் இருந்து விமான பொறியாளர்களை ஏற்றி வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News