செய்திகள்
தமிழகத்திற்கு இன்று ஒரே நாளில் 8 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வருகை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போதிய அளவு தடுப்பூசி இல்லாததால் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டது.
சென்னை:
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு கொள்முதல் மூலம் தடுப்பூசிகள் வருகின்றன. ஆனால் போதிய சப்ளை இல்லாததால் சில பகுதிகளில் தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போதிய அளவு தடுப்பூசி இல்லாததால் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டது. தடுப்பூசி போடுவதற்காக வந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் நேற்று 3.65 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் இருந்து சென்னைக்கு வந்தடைந்தன. அதன்பின்னர், இன்று ஒரே நாளில் 8 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்தன. காலையில் 1 லட்சத்து 25 ஆயிரம் டோஸ்கள் கோவாக்சின் தடுப்பூசிகள், மாலையில் 7 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன.
இதையும் படியுங்கள்: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு
இந்த தடுப்பூசிகள் மாவட்டம் வாரியமாக பிரித்து அனுப்பப்படுகின்றன. இதனால் நாளை முதல் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி வேகமெடுக்கும்.