செய்திகள்
விபத்து

அம்மாபேட்டை அருகே ரோட்டை கடந்த முதியவர் விபத்தில் பலி

Published On 2019-12-04 11:27 GMT   |   Update On 2019-12-04 11:27 GMT
அம்மாபேட்டை அருகே ரோட்டை கடந்த முதியவர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே உள்ள ஆனந்தம் பாளையத்தை சேர்ந்தவர் அய்யாகுட்டி (வயது 80) கூலி தொழிலாளி.

இவர் மேட்டூர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது ரோட்டை கடக்க முயன்றார். அந்த வழியாக மேட்டூரில் இருந்து பவானி நோக்கி சென்ற ஒரு ஆம்னி வேன் எதிர்பாராதவிதமாக அய்யாகுட்டி மீது மோதியது.

இதில் பலத்த அடிபட்ட அய்யாகுட்டியை 108 ஆம்புலன்சு மூலம் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News