ஆன்மிகம்
வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2021-01-04 03:11 GMT   |   Update On 2021-01-04 03:11 GMT
வார விடுமுறை என்பதால், பழனி முருகன் கோவிலுக்கு நேற்று பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்திருந்தனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. தைப்பூச திருவிழா தொடங்குவதற்கு முன்பே, பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர். இதுமட்டுமின்றி வார விடுமுறை என்பதால், பழனி முருகன் கோவிலுக்கு நேற்று பக்தர்கள் குவிந்தனர். 

அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான படிப்பாதை, யானைப்பாதை ஆகிய இடங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதேபோல் உபகோவிலான திருஆவினன்குடி கோவிலிலும் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. பக்தர்களின் வாகனங்கள் அதிகம் இருந்ததால் பூங்காரோடு, அடிவாரம் ரோடு, பஸ்நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News