செய்திகள்
கோப்புபடம்

காரைக்குடி அருகே விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை

Published On 2020-11-22 12:54 GMT   |   Update On 2020-11-22 12:54 GMT
காரைக்குடி அருகே விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:

காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்தவர் ஜான் தேவதாசன் (வயது 52). பெயிண்டர். இவர் சமீப காலமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். 

பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து விட்டார். 

இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News