ஆன்மிகம்
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது எடுத்த படம்.

தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம்

Published On 2021-02-19 05:36 GMT   |   Update On 2021-02-19 05:36 GMT
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழா வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் அபிஷேக தீபாராதனை, மாலையில் மண்டகப்படி பூஜை மற்றும் சுவாமி- அம்பாள் வீதி உலா ஆகியன நடைபெறுகின்றன.

விழாவின் 9-ம் நாளான வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News