உள்ளூர் செய்திகள்
திருட்டு

சிவகாசி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2021-12-03 13:35 GMT   |   Update On 2021-12-03 13:35 GMT
சிவகாசி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 34). இவர் காமராஜர்புரத்தில் மோட்டார் சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரிடம் முருகையாபுரத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அவரது மோட்டார் சைக்கிளை ரிப்பேர் செய்ய கொடுத்துள்ளார். பின்னர் கருப்பசாமிக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வாங்கி சென்றுள்ளார். அந்த மோட்டார் சைக்கிளை தனது வீட்டின் முன்பு விஜயகுமார் நிறுத்தி உள்ளார். பின்னர் அடுத்தநாள் காலையில் எழுந்து வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை பார்த்தபோது அது காணவில்லை. இது குறித்து அதிர்ச்சி அடைந்த விஜயகுமார், மோட்டார் சைக்கிள் உரிமையாளர் கருப்பசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிள் காணாமல் போனது குறித்து கருப்பசாமி சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News