செய்திகள்
விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண் கைது
விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண் கைதான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கீழநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி கீழநத்தம் மெயின்ரோட்டை சேர்ந்த தேவகி(வயது 55) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மது விற்றது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவகியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.