ஆன்மிகம்
கோவில்பட்டி புற்றுக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

கோவில்பட்டி புற்றுக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

Published On 2021-09-30 04:09 GMT   |   Update On 2021-09-30 04:09 GMT
காலபைரவருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலபைரவருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள், சமூக இடைவெளி விட்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News