செய்திகள்
நெல்லை மாவட்டத்தில் 2 மாணவிகள் மாயம்
நெல்லை மாவட்டத்தில் 2 மாணவிகள் மாயமானது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பூதப்பாண்டி. இவரது மகள் சசி கவிதா (வயது17). இவர் அந்த பகுதியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று இவர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடுதிரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து பூதப்பாண்டி ராதாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சசி கவிதாவை தேடி வருகின்றனர்.
வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் சீவலப்பேரியான். இவரது மகள் முத்துக்குமாரி (வயது23). இவர் எம்.பி.ஏ. இறுதியாண்டு தேர்வு எழுதி, வேலை தேடி வந்தார்.
நேற்று முன்தினம் இவர் தோழிகளை பார்க்க போவதாக சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. தோழிகள் வீட்டிலும் இல்லை. இதனால் சீவலப்பேரியான் வீரவநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரியை தேடி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பூதப்பாண்டி. இவரது மகள் சசி கவிதா (வயது17). இவர் அந்த பகுதியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று இவர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடுதிரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து பூதப்பாண்டி ராதாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சசி கவிதாவை தேடி வருகின்றனர்.
வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் சீவலப்பேரியான். இவரது மகள் முத்துக்குமாரி (வயது23). இவர் எம்.பி.ஏ. இறுதியாண்டு தேர்வு எழுதி, வேலை தேடி வந்தார்.
நேற்று முன்தினம் இவர் தோழிகளை பார்க்க போவதாக சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. தோழிகள் வீட்டிலும் இல்லை. இதனால் சீவலப்பேரியான் வீரவநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரியை தேடி வருகிறார்கள்.