செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

Published On 2021-10-23 12:56 GMT   |   Update On 2021-10-23 12:56 GMT
ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:

ஆம்பூரை அடுத்த பெரியங்குப்பம் பகுதியில் இம்தியாஸ் என்பவரின் வீட்டில் அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் பாபு (வயது 32) என்பவர் நேற்று எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி பாபு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் பாபுவின் உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News