உள்ளூர் செய்திகள்
அடைப்பட்டு இருக்கும் மழைநீர் வடிகால் ஓடை.

வேர்கிளம்பி பகுதியில் மழைநீர் வடிகால் ஓடையை சீரமைக்க வேண்டும்

Published On 2022-01-13 10:16 GMT   |   Update On 2022-01-13 10:16 GMT
வேர்கிளம்பி பகுதியில் மழைநீர் வடிகால் ஓடையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நாகர்கோவில்:

வேர்கிளம்பி பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லன்விளை பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் வேர்கிளம்பி பேரூராட்சி பகுதியில் உள்ள மழைநீர் கண்ணனூர் ஊராட்சி வழியாக பாய்ந்து செல்கிறது.

 தற்போது அந்த பகுதியில் உள்ள அடி மடை மண்ணால் அடைப்பட்டு மழை தண்ணீர் போக முடியாமல் தேங்கி நிற்கிறது.

இதனால் அந்த பகுதியில் கொசு உற்பத்தி ஆகி நோய் பரவும் அபாயம் உள்ளது இந்த பகுதியானது அழகியமண்டபத்தில் இருந்து திருவட்டார் செல்லும் சாலையாகும்.

 எனவே அந்த பகுதியில் மழைநீர் சீராக செல்லும் வகையில் அடி மடையில் அடைக்கப்பட்டிருக்கும் அடைப்புகளை அகற்றி சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
Tags:    

Similar News