உள்ளூர் செய்திகள்
மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியபோது எடுத்தபடம்

திருப்பூரில் பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கி விழிப்புணர்வு

Published On 2022-01-13 07:02 GMT   |   Update On 2022-01-13 07:02 GMT
பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம், மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர்:

திருப்பூரில் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் நோக்கத்திலும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும் திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி துணிப்பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழகத்தில் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை முதல்வர் முக ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார். 

பிளாஸ்டிக் பைகள் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம், மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி இன்று திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கினார். 

மேலும் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். சுமார் 500க்கும் மேற் பட்டோருக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News