ஆன்மிகம்
நாகராஜா கோவிலில் தை திருவிழா கால்கோள் விழா நடந்தது

நாகராஜா கோவிலில் தை திருவிழா கால்கோள் விழா நடந்தது

Published On 2020-12-01 04:03 GMT   |   Update On 2020-12-01 04:03 GMT
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழாவுக்கான கால்கோள் விழா நடந்தது. இதையொட்டி காலையில் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழாவுக்கான கால்கோள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. 

தொடர்ந்து கோவில் வளாகத்தில் கால்கோள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் அறநிலையத்துறை உறுப்பினர்கள் சந்துரு என்ற ஜெயச்சந்திரன், சதாசிவம், வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, நாகராஜா கோவில் அறங்காவலர் ஆறுமுகதரன், பக்தர்கள் சங்க நிர்வாகிகள் ராஜன், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News