செய்திகள்
கைது

கூலித்தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

Published On 2021-09-22 18:28 GMT   |   Update On 2021-09-22 18:28 GMT
கூலித்தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி சோக்காடி அருகே உள்ள நாடார் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). சம்பவத்தன்று இவர் மனைவியுடன் மொபட்டில் மோரமடுவு கூட்டு ரோடு அருகில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் மற்றொரு மோட்டார்சைக்கிளில் பாலேகுளியை சேர்ந்த முருகன் (24) , பி.மருதேப்பள்ளியை சேர்ந்த தங்கவேல் (21) ஆகியோர் வந்தனர். அவர்கள் ராஜேந்திரன் மீது மோதுவதை போல வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜேந்திரன் கேட்டார்.அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜேந்திரனை, முருகனும், தங்கவேலும் சேர்ந்து தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த ராஜேந்திரன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகன், தங்கவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News