ஆட்டோமொபைல்
வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் சேவையை நீட்டித்த ரெனால்ட்
ரெனால்ட் நிறுவனம் தனது வாகனங்களுக்கான வாரண்டி சலுகை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது வாகனங்களுக்கான வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் சேவையை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த வசதி வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் சேவை ஏப்ரல் 1 துவங்கி மே 31 வரையிலான காலக்கட்டத்தில் நிறைவு பெறும் வாகனங்களுக்கு மட்டும் பொருந்தும்.
சேவை நீட்டிப்பு ஜூலை 31 வரை வழங்கப்படுகிறது. இதுதவிர ரெனால்ட் நிறுவனத்தின் 24x7 ரோட்சைட் அசிஸ்டண்ஸ் சேவை ஆபத்து காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். பல பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், ரெனால்ட் தனது சேவைகளை டிஜிட்டல் தளங்களில் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஆன்லைன் மட்டுமின்றி மை ரெனால்ட் செயலி மூலம் அனைத்து மாடல்கள் பற்றி அறிந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. தற்போது ரெனால்ட் நிறுவனம் க்விட், டஸ்டர், டிரைபர் மற்றும் கைகர் போன்ற மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.