வழிபாடு
பழனி கோவில்

மார்கழி மாத பிறப்பையொட்டி பழனி கோவில்களில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு

Published On 2021-12-15 08:33 GMT   |   Update On 2021-12-15 08:33 GMT
மார்கழி மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
மார்கழி மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களான பெரியநாயகி அம்மன் கோவில், திருஆவினன்குடி, பட்டத்து விநாயகர் கோவில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறும். இந்த நடைதிறப்பு, பூஜை முறைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி வரை நடைபெறும். மேலும் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வருகிற 20-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும்.

அதேபோல் பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில்களில் ஜனவரி 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். இவ்வாறு பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News