செய்திகள்
பாலாற்றில் சிக்கிய 7 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்த போது எடுத்த படம்.

பாலாற்றில் குளித்த 7 பேர் வெள்ளத்தில் சிக்கினர் - தேசிய பேரிடர் குழுவினர், தீயணைப்பு துறையினர் மீட்டனர்

Published On 2021-11-15 11:22 GMT   |   Update On 2021-11-15 11:22 GMT
ஓச்சேரி அருகே பாலாற்றில் குளிக்க சென்ற 7 இளைஞர்களை மாவட்ட தீயணைப்பு துறை மற்றும் அரக்கோணம் தேசிய பேரிடர் குழுவினர் மீட்டனர்.
காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த மாமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏழுமலை மகன் நந்தகுமார் (வயது 18), ரஞ்சித்குமார் மகன் சின்ராசு (18), முனுசாமி மகன் விசுவநாதன் (20), சிங்காரம் மகன் சுபாஷ் (20), முருகன் மகன் ரமேஷ் (20), சுதாகர் மகன் கோகுல் (20),மதியழகன் மகன் அமுதன் (20). இவர்கல் 7 பேரும் மாமண்டூர் பாலாற்றில் குளிக்க சென்றுள்ளனர். குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென வெள்ளப்பெருக்கு அதிகரித்து்ள்ளது.

இதனால் 7 பேரும் கரைக்கு செல்ல முடியாமல் ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் சிக்கிக் கொண்டனர். இதனைக் கண்ட கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வருவாய் துறையினர் கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் நவீன கருவிகளுடன் வருகை புரிந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆகியோர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.

சுமார் ½ மணி நேரத்தில் ஆற்றின் மையப்பகுதியில் மணல் திட்டில் சிக்கி தவித்த 7 பேரையும் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நவீன மோட்டார் படகின் உதவியோடு மீட்டனர். அப்போது பாலாற்றில் 10 ஆயிரம் கன அடி நீர் சென்று கொண்டிந்தது.

7 பேரையும் மீட்ட பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்களை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பாராட்டினர்.
Tags:    

Similar News