தொழில்நுட்பம்
புதிய வயர்லெஸ் இயர்போன் அறிமுகம் செய்யும் நோக்கியா
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய ஆடியோ சாதனத்தை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் புதிய நோக்கியா பிராண்டு ஆடியோ சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ஏப்ரல் 5 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகமாகிறது. புதிய ஆடியோ சாதனம் மழை, கூட்ட நெரிசல் மிக்க பகுதி, உடற்பயிற்சி, விளையாட்டு என பல செயல்களின் போது பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஏப்ரல் 5 ஆம் தேதி புதிய இயர்போன் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கும் டீசர்களும் புதிய ஆடியோ சாதனம் இயர்போனாக இருக்கும் என்பதையே உணர்த்துகிறது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி நோக்கியா பிராண்டு விரைவில் ப்ளூடூத் வசதி கொண்ட நெக்பேண்ட் இயர்போன்களை ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது. புதிய இயர்போன் ப்ளூடூத் 5.1 வசதி, குவால்காம் நிறுவனத்தின் ஆப்ட்எக்ஸ் ஹெச்டி ஆடியோ தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
இத்துடன் ரேபிட் சார்ஜிங் வசதி, பிளாக், புளூ மற்றும் கோல்டன் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆடியோ சாதனம் தவிர ஏப்ரல் 8 ஆம் தேதி நோக்கியா எக்ஸ் சீரிஸ் மற்றும் ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.