லைஃப்ஸ்டைல்
கேழ்வரகு தக்காளி தோசை

சத்தான கேழ்வரகு தக்காளி தோசை

Published On 2021-01-21 05:22 GMT   |   Update On 2021-01-21 05:22 GMT
கொத்தமல்லி தோசை, வெங்காய தோசை, சிக்கன் கறி தோசை... என விதமான தோசைகள் உள்ளது. தக்காளியில் கூட சுவையான மொறு மொறு தோசை செய்யலாம்.
தேவையான பொருள்கள் :

தக்காளி - 3
கேழ்வரகு மாவு - 250 கிராம்
வெங்காயம் - 1
இட்லி மாவு - 100 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1 ஸ்பூன்

செய்முறை:

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்சியில் கேழ்வரகு மாவு, தக்காளி, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் இட்லி மாவில் அரைத்த கலவையை தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

நறுக்கிய வெங்காயத்தையும் மாவில் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு அதில் மாவை ஊற்றி பொன்னிறமாக வரும் வேளையில் தோசையை திருப்பி எடுத்தால் சுவையான மொறு மொறு கேழ்வரகு தக்காளி தோசை தயார்..

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News