உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தக்கலை அருகே தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

Published On 2022-04-17 08:57 GMT   |   Update On 2022-04-17 08:57 GMT
தக்கலை அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கன்னியாகுமரி:

தக்கலை அருகே அப்பட்டுவிளை சிவனி கோணம் பகுதியை சேர்ந்தவர் மிக்கேல் தாசன். இவரது மகன் கெனிஷ் (வயது 29). கூலி தொழிலாளி.

பிளஸ்-2 வரை படித்த இவர் பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மிகவும் மன வருத்த்துடன் காணப்பட்டார்.  நேற்று இரவு தனது தாயார் கோவிலுக்கு சென்றதும் அறைகதவை மூடி விட்டு உள்ளே சென்றார். 

தாயார் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டில் வந்து பார்த்த போது கெனிஷ்  தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.  இதைகண்டு அலறிய அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர், அவர்கள் கெனீஷ் உடலை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து கெனிசின் தாயார் மேரி சரோஜினி தக்கலை போலீஸ்  நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News