செய்திகள்

அரும்பார்த்தபுரத்தில் வீட்டின் கூரை சரிந்து தொழிலாளி பலி

Published On 2019-02-10 16:43 GMT   |   Update On 2019-02-10 16:43 GMT
அரும்பார்த்தபுரத்தில் வீட்டின் கூரை சரிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே அரும்பாரத்தபுரம் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 52). கூலித்தொழிலாளி. நேற்று இவர், தனது ஆஸ்பெட்டாஸ் கூரை வீட்டை மனைவி பாக்கியலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் செப்பனிடும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஆஸ்பெட்டாஸ் கூரை சரிந்து விழுந்ததில் முருகானந்தம் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே முருகானந்தம் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News