செய்திகள்
சிங்காரப்பேட்டை அருகே விவசாயி தற்கொலை
சிங்காரப்பேட்டை அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லாவி:
சிங்காரப்பேட்டை அருகே உள்ள பொம்மதாசம்பட்டியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 65). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை அவருடைய மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த தேவராஜ், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.