செய்திகள்
கீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்ற 3 பேர் கைது
கீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கீழ்வேளூர் அருகே வடக்காலத்தூர் பிள்ளையார் குளம் பகுதியை சேர்ந்த பாண்டியன் (வயது52), அத்திப்புலியூரை சேர்ந்த சிற்றரசு (56), பொன்வெளி மடத்தான் தெருவை சேர்ந்தவர் குமார் (35) ஆகியோர் என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.