உள்ளூர் செய்திகள்
குலசேகரன்பட்டணம் பகுதியில் நாளை மின்தடை
திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட உபமின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் உடன்குடி, மணப்பாடு பகுதியில் நாளை மின்வினியோகம் இருக்காது.
உடன்குடி:
திருச்செந்தூர் மின் விநியோக பொறியாளர் ராம்மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட உபமின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஆலந்தலை, கணேசபுரம், கந்தசாமிபுரம், கல்லாமொழி, மணப்பாடு, குலசேகரன்பட்டணம், சிறுநாடார்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் உயர் அழுத்த மின் இணைப்பிற்கும் மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.