செய்திகள்
சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
ஈரோட்டில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு:
ஈரோடு வெண்டிபாளையம் சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது பாசில் (வயது 21). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கறி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் முகமது பாசிலுக்கு ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி முகமது பாசில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த 17 வயது சிறுமி கர்ப்பம் அடைந்தார்.
இந்நிலையில் மகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து இந்த சிறுமியிடம் கேட்டுள்ளனர். அப்போது அந்த சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இதுபற்றி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் முகமது பாசில் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு வெண்டிபாளையம் சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது பாசில் (வயது 21). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கறி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் முகமது பாசிலுக்கு ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி முகமது பாசில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த 17 வயது சிறுமி கர்ப்பம் அடைந்தார்.
இந்நிலையில் மகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து இந்த சிறுமியிடம் கேட்டுள்ளனர். அப்போது அந்த சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இதுபற்றி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் முகமது பாசில் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.